» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேய்க்குளம் பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சனி 25, மார்ச் 2023 11:38:45 AM (IST)
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரம் கிராமம் பேய்க்குளம் பஜாரில் உள்ள நான்கு பக்க சாலையில் ஆக்கிரமிப்பு உள்ளதாக வரப்பட்ட புகாரை தொடர்ந்து ஆக்கிரமிப்புதாரர்களுக்கு ஆக்கிரமிப்பு சட்ட விதிகளின்படி நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் மூலம் முறையான விளம்பர நோட்டீஸ் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலக்கெடு முடிவடைந்த பின்னரும் ஆக்கிரமிப்புதாரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாததால் நேற்று சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் நெடுஞ்சாலை உதவி பொறியாளர், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளர் பொன்இசக்கி. மண்டல துணை வட்டாட்சியர் மைக்கேல், சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் உள்ளிட்ட காவல் துறையினர், பொதுப்பணி துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுப்பட்டனர்.