» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பஸ்சில் செயின் பறிப்பு: தூத்துக்குடி டிப்டாப் பெண்கள் மூவர் கைது
சனி 25, மார்ச் 2023 10:27:07 AM (IST)
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் 7 பவுன் செயினை பறித்த வழக்கில் துாத்துக்குடியை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அனந்தநாடார் குடியை சேர்ந்தவர் சுனிதா (39). இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் மாயமாகியிருந்தது. அவர் கொடுத்த புகாரில் ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மூன்று பெண்கள் பற்றி சந்தேகம் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்திய போலீசார் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த துாத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பிரியா (எ) தேவயானை (29), நதியா (எ) மாரீஸ்வரி 24, பிரியா (எ) ஈஸ்வரி 25, ஆகிய மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். 'டிப்டாப் ஆடைகள் அணிந்து பஸ்களிலும், பஸ் ஸ்டாண்டுகளில் நின்று செயின், பர்ஸ் திருடும் அவர்கள் சுனிதாவிடம் செயின் திருடியது விசாரணையில் தெரியவந்தது. மூவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நல்லMar 25, 2023 - 10:37:43 AM | Posted IP 162.1*****