» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பான செயல்பாடு: தூத்துக்குடி அதிகாரிக்கு ஜனாதிபதி விருது
வியாழன் 26, ஜனவரி 2023 6:11:57 PM (IST)
போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவு அதிகாரி முரளிக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் பணியாற்றும் துறைகளில் அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும் மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்களின் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னை கோவை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை மண்டல மத்திய வருவாய்புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளிக்கும் ஜானாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவருக்கு ஜனாதிபதிவிருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
