» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடங்கிபட்டி கிராமத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
வியாழன் 1, டிசம்பர் 2022 3:45:04 PM (IST)

புதூர் ஊராட்சி ஒன்றியம் அயன் கோடங்கிபட்டி கிராமத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், அயன் கோடங்கிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தமும், தாப்பாத்தி கிராமத்தில், ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தமும், வீரப்பட்டி கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை, விவசாய உலர்களம் உள்ளிட்ட பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், பொறியாளர்கள் ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், புதூர் செல்வராஜ், பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், அயன் கோடாங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பரமசிவம், தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பாண்டி, வீரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுசிலாராணி, ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் பரமேஸ்வரி, வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
