» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உணவு டெலிவரி ஊழியரிடம் பைக், செல்போன் பறிப்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 11:22:04 AM (IST)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி உணவு டெலிவரி ஊழியரிடம் செல்போன், பைக்கை பறித்துச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்தவர் சேசுராஜா மகன் ஜெனிஸ்டன் (20). இவர் தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அண்ணா நகர் 12 தெருவில் உணவு டெலிவரி கொடுக்க சென்றபோது 2பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், மற்றும் அவரது பைக்கை பறித்துச் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory