» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் டவரில் பேட்டரிகள் திருடியவர் கைது : 2 ஆட்டோக்கள் பறிமுதல்

வியாழன் 1, டிசம்பர் 2022 11:13:06 AM (IST)



தூத்துக்குடியில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 10 பேட்டரிகள், 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சிநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரில் உள்ள 12 பேட்டரிகள் கடந்த 24.11.2022 அன்று திருடுபோயுள்ளது. இதுகுறித்து டவரில் பாதுகாவலராக வேலை பார்க்கும் சிதம்பரம்பட்டி பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் பரமானந்தம் (47) என்பவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தூத்துக்குடி தாளமுத்துநகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் மகன் அருள் ராஜா (42) என்பவர் டவரில் இருந்த பேட்டரிகளை ஆட்டோக்களில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ் வழக்குபதிவு செய்து, அருள் ராஜாவை கைது செய்து அவரிடமிருந்த ரூ.70ஆயிரம் மதிப்புள்ள 10 பேட்டரிகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory