» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிரபல ரவுடி தூக்கிட்டு தற்கொலை!
வியாழன் 1, டிசம்பர் 2022 10:38:31 AM (IST)
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன், சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் ரீத் (44). பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட 14 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.