» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை துவக்கம்: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு!
வியாழன் 24, நவம்பர் 2022 11:56:31 AM (IST)

கோவில்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை வந்து செல்லும் புதிய பேருந்து சேவையை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பேருந்தை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன், கோவில்பட்டி தொமுச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மணியாச்சி கிளை செயலாளர்கள் தம்பான், ரத்தினவேல், மணியாச்சி கிளை பிரதிநிதிகள் பேச்சிபாண்டி, குமார், அய்யாத்துரை பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3பேர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 8:06:04 AM (IST)

சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி : செயில் ஹாக்கி அணிகள் சாம்பியன்
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:55:09 AM (IST)

அதிமுக குறித்துப் பேச டிடிவி தினகரனுக்கு உரிமை இல்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:51:56 AM (IST)

திருச்செந்தூா் பக்தா் பலி : பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:46:44 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)
