» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் 17 போலீசார் மீது நடவடிக்கை : அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 7:41:03 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிகழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை.
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர்.
தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது. இவ்வாறாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
BhuvanenthiranAug 18, 2022 - 11:42:17 PM | Posted IP 162.1*****
அனைவருக்கு என்ன தண்டனை கொடுப்பிங்க மேடம் பணி நீக்கம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுங்க மேடம்
கடவுள் இருக்கிறார்Aug 18, 2022 - 09:33:59 PM | Posted IP 162.1*****
ஆம் , அண்ணா நகர், போன்ற சில தெருக்களில் ஓடி சுட்டு கொன்றார்கள் , ரொம்ப நாள் கழித்து தான் தெரியுதோ. முதல்ல சுட்டு கொன்ற போலீசார்களால் தான் பெரிய பிரச்னை . சீக்கிரம் தண்டனை கொடுங்கள்.
மேலும் தொடரும் செய்திகள்

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக சிறப்பு பயிற்சி
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:14:57 PM (IST)

அரசு திட்டங்களை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:10:58 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வெள்ளி 1, டிசம்பர் 2023 4:05:13 PM (IST)

ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது : பைக் பறிமுதல்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:54:47 PM (IST)

நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா: டிச.02 ஆம்தேதி நடக்கிறது.
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:43:28 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வெள்ளி 1, டிசம்பர் 2023 3:40:58 PM (IST)

காவல்துறைக்கு ஒரு சட்டம் , சாமானியனுக்கு ஒரு சட்டம்Aug 19, 2022 - 09:52:01 AM | Posted IP 162.1*****