» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார். அவரது சகோதரன் காயம் அடைந்தார்.
தூத்துக்குடி சுந்தரவேல் புரம் 8-வது தெரு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் சுஷ்மிதா (25). இவர் தனது உறவினரான (பெரியம்மா மகன்) கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த நித்திய கணேசன் மகன் முத்து குமாரவேல் மகன் நித்திய கணேசன் (20) என்பவருடன் மோட்டார் பைக்கில் வேலை தொடர்பாக மீளவிட்டான் ரோட்டில் உள்ள ஒரு கம்பெனிக்கு சென்று கொண்டிருந்தார்.
சின்னக்கண்ணுபுரம் பகுதியில் வரும்போது, ஒரு சந்தில் இருந்து திடீரென வந்த ட்ரை சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக பைக்கை திருப்பியுள்ளார். அப்போது எதிர்த்திசையில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.