» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.3.60 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் ெசலுத்திய பணம், பொருட்கள் இந்த மாதத்துக்கு 3வது முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் இணை ஆணையர் கார்த்திக் தலைமையில், தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் எண்ணும் பணி நடந்தது.
இதில் சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் உதவி ஆணையர் தங்கம், திருச்செந்தூர் கோவில் அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, ஆய்வர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, நம்பி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணிக்குழுவினர், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதில், ரூ.1 கோடியே 20 லட்சத்து 23 ஆயிரத்து 362 கிடைத்துள்ளது. கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 கிடைத்தது. அதேபோல் 22-ந் தேதி ரூ.70 லட்சத்து 54 ஆயிரத்து 797 கிடைத்தது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் மூன்று முறை எண்ணப்பட்டதில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 32 ஆயிரத்து 195 கிடைத்துள்ளது. அதேபோல் மொத்தத்தில் தங்கம் 3 கிலோ 735 கிராமும், வெள்ளி 35 கிலோ 760 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 1,445 கிடைத்துள்ளது.
முருகன் அடிமைJun 29, 2022 - 03:57:33 PM | Posted IP 162.1*****