» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை

செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)



தூத்துக்குடியில் வருகிற 7-ம் தேதி துவங்க உள்ள நெய்தல் விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் ஜூலை 7 முதல் 10-ம் தேதி வரை நெய்தல் விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தினமும் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் அந்த அரங்குகளை கண்டுகளிக்கும் வகையில் இந்த விழா பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. 

கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், நெய்தல் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory