» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு
ஞாயிறு 15, மே 2022 7:57:33 PM (IST)
தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மின்சாரம் தாக்கியதில் கேசியர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாலை மகன் செல்வராஜ் (51) இவர் மாப்பிள்ளையூரணியிலுள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் கேசியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று அலுவலகத்தில் டியூப் லைட்டை மாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.