» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே ஓடை மணல் திருடியவர் கைது : லாரி பறிமுதல்!
சனி 14, மே 2022 3:17:39 PM (IST)
தூத்துக்குடி அருகே ஓடை மணல் திருடியவரை போலீசார் கைது செய்தனர். திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சாயர்புரம் அருகே நட்டாத்தி ஓடையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மணக்காடு பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் செல்லத்துரை (31) என்பவர் உரிய அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை கைது செய்னர். அவரிடமிருந்து 5 யூனிட் ஓடை மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
என்னடா சொல்ரீங்க ?மே 14, 2022 - 04:36:22 PM | Posted IP 162.1*****
உரிய அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடியது தெரியவந்தது. அப்போ அரசு அனுமதி பெற்று திருடலாமா ஆபீஸ்சர்??
aaamaமே 14, 2022 - 06:11:13 PM | Posted IP 162.1*****