» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் வாலிபர் பலி - நண்பர் படுகாயம்!

ஞாயிறு 16, ஜனவரி 2022 10:41:58 AM (IST)

சூரங்குடி அருகே பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயமடைந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள முள்ளூர்  கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி மகன் ராமசாமி (23). ஆறுமுகம் மகன் மாரிச்செல்வம் (23). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று மேல்மாந்தை கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கடந்த போது நிலை தடுமாறி பைக் விபத்துக்குள்ளானது. இதில் ராமசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதே இடத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். மாரிச் செல்வம் படுகாயத்துடன் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது சம்பந்தமாக சூரங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory