» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!

ஞாயிறு 16, ஜனவரி 2022 9:35:06 AM (IST)

கோவில்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை காமராஜ் நகர் பகுதியில் உள்ள  கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் விசாரணையில் கால்வாயில் இறந்து கிடந்த அந்த நபர், கோவில்பட்டி பாரதி நகர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சஞ்சீவி மகன் மகாலிங்கம் என்பதும், கூலித் தொழிலாளியான இவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென கால் தவறி கால்வாய்க்குள் விழுந்து நீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory