» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோவில் மதுபாட்டில்கள் கடத்தல்: டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 3 பேர் கைது

ஞாயிறு 16, ஜனவரி 2022 9:10:25 AM (IST)

எட்டயபுரம் அருகே ஆட்டோவில் மதுபான பாட்டில்களை கடத்தியது தொடர்பாக டாஸ்மாக மேற்பார்வையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மாசார்பட்டி காவல் ஆய்வாளர் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் போலீசார் பட்டிதேவன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள காட்டுப்பாதை வழியாக சந்தேகப்படும் படியாக சென்ற இரண்டு ஆட்டோக்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 580 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகலாபுரத்தை சேர்ந்த செந்தில்வேல்(49), ராகுல் (22) என்பது என்பது தெரியவந்தது.

இதையடுத்து சட்ட விரோதமாக மதுபாட்டிக்களை கடத்தியதாக அவர்களை போலீசார் கைது செய்து, ஆட்டோவையும், 580 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நாகலாபுரம் அருகே செங்கோட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தியதும், கடை மேற்பார்வையாளர் கோமதி குருநாதன் (47) என்பவர் அதற்கு உதவியாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory