» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் 3¾ பவுன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 16, ஜனவரி 2022 8:43:31 AM (IST)

ஏரல் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம்  3¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள திருவழுதி நாடார் விளையைச் சேர்ந்தவர் கோவிந்தன் (42). இவர் ஏரலில் உள்ள ஜவுளி கடையில் லோடு வேன் டிரைவராக உள்ளார். அவரது மனைவி புவனேஸ்வரி (36). சம்பவத்தன்று பகலில் ஏரல் பஜாரில் பொருட்களை வாங்கி கொண்டு மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். 

அப்போது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென்று புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3¾ பவுன் தாலிசெயினை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory