» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் 3¾ பவுன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 16, ஜனவரி 2022 8:43:31 AM (IST)
ஏரல் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 3¾ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள திருவழுதி நாடார் விளையைச் சேர்ந்தவர் கோவிந்தன் (42). இவர் ஏரலில் உள்ள ஜவுளி கடையில் லோடு வேன் டிரைவராக உள்ளார். அவரது மனைவி புவனேஸ்வரி (36). சம்பவத்தன்று பகலில் ஏரல் பஜாரில் பொருட்களை வாங்கி கொண்டு மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார்.
அப்போது பின்னால் மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர் திடீரென்று புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3¾ பவுன் தாலிசெயினை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.