» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50ஆயிரம் நிதியுதவி வழங்கல்!
வியாழன் 9, டிசம்பர் 2021 10:10:47 AM (IST)
தூத்துக்குடியில் கரோனா தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுதாரர்கள் 10 நபர்களுக்கு நிவாரண நிதி அனுமதிக்கப்பட்டதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றினால் இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.50,000/-ம் வழங்க தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 394 நபர்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளர்கள். 224 நபர்களின் வாரிசுதாரர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் நிவாரணம் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக 207 நபர்களுக்கு தலா ரூ.50,000/-ம் அனுமதிக்கப்பட்டு மனுதாரர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
truthDec 9, 2021 - 11:19:59 AM | Posted IP 173.2*****