» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக பொன்விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!
புதன் 27, அக்டோபர் 2021 3:03:34 PM (IST)
தூத்துக்குடியில் அதிமுக 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.
அ.இ.அதிமுக 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும் 39வது வட்டக் தகவல் தொழிலில் நுட்பப் பிரிவு செயலாருமான பா.திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில், வடக்கு ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து வேட்டி, சேலை, அயர்ன் பாக்ஸ், தையல் மெஷின் ஆகியவை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர் வீரபாகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே.பிரபாகர், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தலைமைக் கழகப் பேச்சாளர் முருகானந்தம், வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முனியசாமி, செங்குட்டுவன், இலட்சுமண பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்