» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிதாக 4 கண்காணிப்பு கேமராக்கள் : எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்!
புதன் 27, அக்டோபர் 2021 12:24:08 PM (IST)
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட 4 கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு பகுதியில் உள்ள போல்டன்புரம் 2வது தெரு ஜங்ஷன் பகுதியில் தூத்துக்குடி மாநகர கார்த்திக் மக்கள் நல மன்றம் சார்பாக புதிதாக 4 சி.சி.டி.வி கேமாராக்கள் அமைக்கப்பட்டு, இந்த சிசிடிவி கேமராக்களை போல்டன்புரம் பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் மின்திரை மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், காவல்துறை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுனைமுருகன், தென்பாகம் உதவி ஆய்வாளர் சிவக்குமார், தென்பாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் மாரிக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கார்த்தி மக்கள் நல மன்ற உறுப்பினர்கள்;, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழன்Oct 27, 2021 - 07:53:21 PM | Posted IP 162.1*****