» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது : பைக் பறிமுதல்
செவ்வாய் 26, அக்டோபர் 2021 12:31:51 PM (IST)
தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள தெற்கு ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி மனைவி வேலம்மாள் (57). இவர் நேற்று மாலை அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர் அவர் கழுத்தில அணிந்திருந்த 5 பவுன் செயினை பறிக்க முயன்றுள்ளார். இதையடுத்து வேலம்மாள் கூச்சலிடவே அப்பகுதி மக்கள், அந்த நபரை பிடித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், நகை பறிக்க முயன்ற கயத்தாறு அச்சன்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பெருமாள் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வேலம்மாள் அளித்த புகாரின் பேரில், ஓட்டப்பிடாரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் எபனேசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.