» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
திங்கள் 18, அக்டோபர் 2021 9:38:07 PM (IST)
சாத்தான்குளம் அருகே தசரா விழாவில் ஏற்பட்ட மோதலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 5பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே செம்மன்குடியிருப்பை சேர்ந்த ராமஜெயம் என்பவர் தலைமையில் அங்குள்ள கோயிலில் தசரா குடில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கோயிலில் வரி கொடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த முத்துராஜா மனைவி மாற்றுத்திறனாளி சித்திரை பாப்பா(40) . என்பவரது உறவினரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சித்திரை பாப்பா, உறவினருக்கு ஆதரவாக தட்டி கேட்டதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சித்திரைபாப்பாவை 5பேர் கும்பல் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன்கள் செந்தில், ராஜதுரை,முத்துக்குமார், சத்தியசெல்வன் மற்றும் பாண்டி மகன் சிவக்குமார் ஆகிய 5பேர் மீது சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.