» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு

திங்கள் 18, அக்டோபர் 2021 9:38:07 PM (IST)

சாத்தான்குளம் அருகே தசரா விழாவில் ஏற்பட்ட மோதலில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி உள்ளிட்ட 5பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே செம்மன்குடியிருப்பை சேர்ந்த ராமஜெயம் என்பவர் தலைமையில் அங்குள்ள கோயிலில் தசரா குடில் அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கோயிலில் வரி கொடுக்காதது தொடர்பாக ஏற்பட்ட தகராறு ஏற்பட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அதே ஊரைச்சேர்ந்த முத்துராஜா மனைவி மாற்றுத்திறனாளி சித்திரை பாப்பா(40) . என்பவரது உறவினரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சித்திரை பாப்பா, உறவினருக்கு ஆதரவாக தட்டி கேட்டதால் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சித்திரைபாப்பாவை 5பேர் கும்பல் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக சாத்தான்குளம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன்கள் செந்தில், ராஜதுரை,முத்துக்குமார், சத்தியசெல்வன் மற்றும் பாண்டி மகன் சிவக்குமார் ஆகிய 5பேர் மீது சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் அருள்சாம்ராஜ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory