» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம், தூத்துக்குடியில் திடீர் தீ விபத்து
திங்கள் 18, அக்டோபர் 2021 9:02:44 PM (IST)
தூத்துக்குடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் லயன்ஸ் டவுன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 4வது தெரு மேற்கு பகுதியை சேர்ந்தவர் பீட்டர் இவரது மகன் அலாய் பர்னாந்து இவருக்கு சொந்தமான காலி மனை இடத்தில் முள் செடிகள் காய்ந்த நிலையில் இருந்தனர். இன்று மாலை 6 மணி அளவில் திடீரென முழு செடிகளில் தீ பிடித்து எரிந்த தீ மளமளவென்று வேகமாக எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் உடனடியாக தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலறிந்த தீயணைப்பு படை அதிகாரி சகாய ராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பைக்கு வைத்த தீ மரத்தில் பற்றியது
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே குப்பைக்கு வைத்த தீ அருகில் மரத்தில் பிடித்து எரிந்ததால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பழைய தீயணைப்பு நிலையம் அருகில் அதிக குப்பைகள் காணப்பட்டதால் பேருராட்சி தூய்மைப்பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்திடாமல் மாலை குப்பைக்கு தீவைத்து சென்றனர். காற்றில் தீ வேகமாக பரவியதில் அருகில் தனியார் மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தில் தீ பற்றி எரிந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். குப்பையை அள்ளி செல்ல அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் தூய்மைப்பணியாளர்கள் வலுகட்டாயமாக குப்பைக்கு தீ வைத்து சென்றதால் மரத்திற்கு தீ பரவியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.