» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா உறுதி : 15 பேர் டிஸ்சார்ஜ்
திங்கள் 18, அக்டோபர் 2021 8:53:23 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 136 ஆக உள்ளது. இன்று 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 561 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 408பேர் உயிரிழந்துள்ளனர்.