» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளால் தாக்கி கொலை முயற்சி: 3 ரவுடிகள் கைது!
திங்கள் 18, அக்டோபர் 2021 4:20:43 PM (IST)
கோவில்பட்டியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகள் 3பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணஸ்வாமி மகன் முத்துக்காளை (24), செல்லச்சாமி மகன் மருதுபாண்டி (27), சிந்தாமணி நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (37) என்பதும், ரவுடிகளான அவர்கள் மூவரும் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைையடுத்து 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.