» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மகன் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் : தூத்துக்குடி எஸ்பியிடம் பெண் மனு!

திங்கள் 18, அக்டோபர் 2021 3:42:25 PM (IST)



தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் பெண் புகார் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், வெம்பூர் ராமசாமி புரத்தைச் சேர்ந்த பரமசிவம் மனைவி சின்ன ஆவுடையம்மாள் (55) என்பவர் தூத்துக்குடி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனு: எனக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இதில் 4 மகன்களுக்கும், 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. 2 மகன்களுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எனது 3வது மகன் முனியசாமி, எட்டையாபுரம் கீழக்கரந்தை கிராமத்தில் கந்தன் என்பவரின் மகள் மகேஸ்வரியை திருமணம் செய்து கீழக்கரந்தை கிராமத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 11.04.2021ம் தேதி தூக்கிட்டு இறந்துவிட்டார்  என்று தகவல் கிடைத்தது.  நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது மகன் முனியசாமி இறந்ததாக அறிந்து கொண்டோம். ஆனால் முனியசாமி சேலையில் தூக்கு மாட்டி இறந்தார் என்பதற்கு அவரது கழுத்தில் ஒரு தடயமுமே இல்லை. எனது மகன் மரணம் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே உடற்கூறு ஆய்வு முடிவு மற்றும் முதல் தகவல் குற்றப் பத்திரிக்கையை வழங்க வேண்டும். எனது மகன் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது போல் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory