» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

திங்கள் 26, ஜூலை 2021 4:52:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் -19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 26.07.2021 முடிய மொத்தம் 7,130 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 27.07.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி, புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி, திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியில், சிலுவைப்பட்டி முறப்பநாடு, பக்கபட்டி, சென்னல்பட்டி, மேலமங்கலகுறிச்சி, மணப்பாடு, அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், வடக்கு சுப்பிரமணியபுரம், வாரண்டிவேல், கீழ நொச்சிக்குளம், அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையபுரம், அங்கன்வாடி மையம் - இளையரசனேந்தல், அங்கன்வாடி மையம் - கீழஈரால், நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி,இ சேவை மையம் - பசுவந்தனை, அங்கன்வாடி மையம் - மணியாச்சி, அங்கன்வாடி மையம் - சொக்கநாதபுரம், அங்கன்வாடி மையம் - சுந்தரராஜபுரம், அங்கன்வாடி மையம் - வடமலாபுரம், சத்துணவு மையம் - குப்பனாபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - அய்யனாருத்து, ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் - காப்புலிங்கம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - ஆவுடையம்மாள்புரம், ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், 

சத்துணவு மையம் - காப்புலிங்கம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - கழுகாசலபுரம், ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், சத்துணவு மையம் - வானரமுட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் - கழுகுமலை, கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - பூசனூர், சமுதாய நலக்கூடம் - வடமலை சமுத்திரம், சமுதாய நலக்கூடம் - எம்.சண்முகபுரம், சமுதாய நலக்கூடம் - டி.சுப்பையாபுரம், சமுதாய நலக்கூடம் - வீரபாண்டியபுரம், ஊராட்சி நூலகம் - கோட்டூர், ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி - நடுக்காட்டூர், அங்கன்வாடி மையம் - மாதலாபுரம் ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory