» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கரோனாவால் மகன் மரணம்: ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை!
திங்கள் 26, ஜூலை 2021 4:40:00 PM (IST)
கோவில்பட்டியில் கரோனாவால் மகன் உயிரிழந்ததால் மனவேதனையில் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஜேஜே நகரைச் சேர்ந்தவர் ராஜ் மகன் அருணாசலம் (66), இவரது மனைவி கலைச்செல்வி (55). இந்த தம்பதியரின் மகன் நிர்மல் ராஜ் சென்னையில் வசித்து வந்தார். அருணாச்சலம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு ஒர்க்ஷாப்பில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், அவரது மகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் கடந்த மே மாதம் உயிரிழந்துவிட்டார்.
இதனால் அருணாச்சாலம் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் அவர் கோவில்பட்டி - நல்லி இரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரேனாவால் மகன் உயிரிழந்ததால் தந்தை தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.