» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோதமாக மது, குட்கா விற்பனை: 31பேர் கைது
திங்கள் 26, ஜூலை 2021 12:04:10 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், முத்தையாபுரம், புதியம்புத்தூர், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஆறுமுகநேரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம், கடம்பூர், புளியம்பட்டி, கயத்தாறு, எப்போதும்வென்றான், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் மற்றும் தட்டார்மடம் ஆகிய 16 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 16 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 228 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், கோவில்பட்டி கிழக்கு, கயத்தாறு, கழுகுமலை, மாசார்பட்டி, புதூர், குளத்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ஆகிய ஆகிய 13 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 15 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 134 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.