» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக மது, குட்கா விற்பனை: 31பேர் கைது

திங்கள் 26, ஜூலை 2021 12:04:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், முத்தையாபுரம், புதியம்புத்தூர், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஆறுமுகநேரி, செய்துங்கநல்லூர், ஓட்டப்பிடாரம், கடம்பூர், புளியம்பட்டி, கயத்தாறு, எப்போதும்வென்றான், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம் மற்றும் தட்டார்மடம் ஆகிய 16 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 16 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 228 புகையிலை பாக்கெட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டது. 

மதுபானம் விற்பனை செய்த 15 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், கோவில்பட்டி கிழக்கு, கயத்தாறு, கழுகுமலை, மாசார்பட்டி, புதூர், குளத்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் ஆகிய ஆகிய 13 காவல் நிலையங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 15 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 134 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory