» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது!
திங்கள் 26, ஜூலை 2021 11:56:38 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்திரகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் வேன் ஸ்டான்ட் அருகே ஒரு பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீவைகுண்டம் நாராயணபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மாரி ராஜா (எ) குணா (31) என்பதும், அவர் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடியை கைது செய்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.