» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொலைபேசி ஒட்டுக்கேட்பு: மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
திங்கள் 26, ஜூலை 2021 11:22:39 AM (IST)
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், இந்திய ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும், ரயில்வே துறையை தனியார் மயமாக்க முயலும் மதிய அரசைக் கண்டித்தும் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி கிளைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன், ஒருங்கிணைப்பாளர் காந்தி சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.