» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் எரிப்பு: போலீசார் விசாரணை
ஞாயிறு 25, ஜூலை 2021 11:00:12 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபரின் பைக் தீவைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் அனீஸ்ராஜ் (25), இவர் தனது மோட்டார் பைக்கை வீட்டு வாசல் அருகே நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலையில் அந்த பைக் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்தனர். எனினும் பைக் முழுமையாக தீப்பற்றி எரிந்து சேதமானது. தனது பைக்கிற்கு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டதாக அனீஸ் ராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிஎஸ்ஐ சர்ச் கட்டுமான பணி தொடர்பாக மடத்தூரைச் சேர்ந்த லட்சுமணன், ராஜவேல் ஆகியோர் தன்னை அடிக்க முற்பட்டதாக அனீஸ் ராஜ் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். இது தாெடர்பாக போலீசார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் அவரது பைக் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.