» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, ஜூலை 2021 10:43:38 AM (IST)
குலசேகரபட்டணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் அருகேயுள்ள வாகைவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்மதுரை மகன் ராஜ் (34), தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. அதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரபட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
adminJul 24, 2021 - 11:51:04 AM | Posted IP 173.2*****