» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசைப்படகில் சென்ற 16 மீனவர்கள் சிறைபிடிப்பு
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:46:15 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து விசைப்படகில் சென்ற 16 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறைபிடித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்த ஜெனீஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 16 மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர. இவர்கள் நெல்லை மாவட்டம், இடிந்தகரை கடற்கரைப் பகுதியில் சென்றதாக கூறி அப்பகுதி மீனவர்கள் தூத்துக்குடி மீனவர்களின் விசைப்படகை சுற்றிவளைத்து சிறைபிடித்து, கடற்கரைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் தூத்துக்குடி மீனவர்களை தாக்கியதாகவும், இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவளத்துறை அதிகாரிகள் இடிந்தகரைக்குச் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளனர். மீனவர்கள் விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
IndianFeb 25, 2021 - 11:24:21 AM | Posted IP 173.2*****
If it is in Ceylon, all the people will condemn Modi.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்.25ல் இறைச்சி கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:45:46 PM (IST)

முக கவசம் அணியாத 1156 பேருக்கு ரூ.2.31 லட்சம் அபராதம்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:38:38 PM (IST)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்: ஆட்சியர் தகவல்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:28:04 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் கலவரம் வெடிக்கும் : பேராசிரியை பாத்திமா பாபு
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:22:16 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : ரஜினிகாந்த் பதில்
வியாழன் 22, ஏப்ரல் 2021 5:08:12 PM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்தை மூட மாணவிகள் எதிர்ப்பு: மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை!!
வியாழன் 22, ஏப்ரல் 2021 4:19:56 PM (IST)

tamilanFeb 26, 2021 - 01:02:07 PM | Posted IP 108.1*****