» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென்கொரிய முன்னாள் அதிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:25:46 AM (IST)



தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்திய முன்னாள் அதிபர் யூன் சக் இயோல்-க்கு உச்ச நீதிமன்றம் சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.

தென்கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சக் இயோல், அதிகாரத்தைத் தக்கவைக்க ராணுவ ஆட்சியை அமல்படுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டார். சியோல் உச்ச நீதிமன்றம் இதனை "மிகப்பெரிய தேசத்துரோகம்" எனக் குறிப்பிட்டு, அவருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்துள்ளது.

ராணுவச் சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் பதவியிழந்தார். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாததால் மரண தண்டனைக்கு பதிலாக இத்தண்டனை வழங்கப்பட்டது. இந்தச் சதிக்கு உதவிய முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு 30 ஆண்டுகளும், முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory