» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷேக் ஹசினாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடிய வங்கதேச இடைக்கால அரசு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:41:11 AM (IST)
ஷேக் ஹசினாவை கைது செய்ய வங்காளதேசத்தின் இடைக்கால அரசு சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துஉள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்பட பல்வேறு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்துஉள்ளது. இதையடுத்து ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே வங்காளதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக ஷேக் ஹசீனா மீதும் அவரது ஆதரவாளர்கள் 72 போ் மீதும் டாக்கா தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' கோரி வங்காளதேச காவல்துறை சர்வதேச போலீசான இன்டர் போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் 11 பேர் மீது நோட்டீஸ் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக் கயை வங்காளதேச காவல் துறையின் தேசிய மத்திய பணியகம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ஷேக் ஹசீனா மீதான விசாரணைகளின் போது அல்லது நடந்து கொண்டிருக்கும் வழக்கு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பாக இந்த விண்ணப்பங்கள் இன்டர்போலிடம் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தப்பியோடியவர்களின் இருப்பிடங்களை அடையாளம் காண்பதில் இன்டர்போல் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:10:11 PM (IST)








