» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

புதன் 24, ஜூலை 2024 12:02:50 PM (IST)



எத்தியோப்பியாவில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எத்தியோப்பியாவில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தனர். அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை வரை 55 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னரும், அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன.

இதனால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலர் மண் சரிவுகளின் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்ட செங்குத்தான மலைப் பகுதியில் மீட்பு பணி நடைபெற்றபோது அந்த இடத்தில் நேற்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இந்த பேரழிவு அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory