» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கதேச வன்முறையில் 36 பேர் பலி; மக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்!
வெள்ளி 19, ஜூலை 2024 5:49:00 PM (IST)

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். டி.வி., நிலையம் எரிக்கப்பட்டது. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது. மக்கள் அமைதி காக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ்
திங்கள் 24, மார்ச் 2025 5:26:06 PM (IST)

கனடாவில் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் உத்தரவு!
திங்கள் 24, மார்ச் 2025 10:07:56 AM (IST)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் மசூதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்; 44 பேர் பலி
ஞாயிறு 23, மார்ச் 2025 9:53:19 AM (IST)

நாடு கடத்தும் உத்தரவை ஒத்திவைக்க கோரிக்கை: அமெரிக்க நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீடு!
சனி 22, மார்ச் 2025 5:38:27 PM (IST)

அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்!
சனி 22, மார்ச் 2025 11:00:16 AM (IST)

அமெரிக்க அரசின் கல்வித்துறை கலைப்பு: அதிபர் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி!
வெள்ளி 21, மார்ச் 2025 11:15:31 AM (IST)
