» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒளிக்கதிர் ஓவியம்போல காட்சியளிக்கும் பிரபஞ்சம்: நாசா வெளியிட்ட அற்புத புகைப்படம்!

செவ்வாய் 12, ஜூலை 2022 3:20:45 PM (IST)



பிரபஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாக நாசா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சத்தின் ஆரம்ப தோற்றத்தை அறிவது குறித்து தீவிரமான ஆய்வைச் செய்து வருகிறது. அதன்படி, பிரபஞ்சம் தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனதைக் கணக்கில் கொண்டு  அப்போது தோன்றிய நட்சத்திரங்கள் மற்றும் அங்கு மனிதர்கள் வாழத் தகுதிகொண்ட கிரகங்களைக் கண்டறியும் முயற்சியாக கடந்த ஆண்டு விண்வெளியில் 10 பில்லியன் டாலர்(ரூ.79,000 கோடி) செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் என்கிற சக்திவாய்ந்த தொலைநோக்கியை(The James Webb Space Telescope) நிறுவியது. 

இந்நிலையில், பல மாதங்கள் காத்திருப்பிற்குப் பின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியில் பதிவான 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) சிதறிக்கிடந்த ஒளிகளை  ஒன்றிணைத்து நாசா புதிய வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நட்சத்திரங்கள், துகள்கள் என சிதறிய ஒளிக்கதிர்களால் ஓவியம்போல காட்சியளிக்கும் இந்தப் படத்தைக் கண்ட பல விஞ்ஞானிகள்  கிட்டத்தட்ட பிரபஞ்சத்தின் தோற்றத்தை நெருங்கி விட்டதாகவும் இது அறிவியல் உலகின் மகத்தான சாதனை எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory