» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபட்ச!

திங்கள் 11, ஜூலை 2022 10:22:06 AM (IST)

இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார் கோத்தபய ராஜபட்ச.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும், பல்கலைக்கழக மாணவா்களும், எதிா்க்கட்சியினா் உள்பட பல்வேறு அமைப்பினரும் திரண்டு வந்து, தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையைக் கைப்பற்றினா். அதற்கு முன்னதாகவே அதிபா் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து வெளியேறிவிட்டாா். அவா் எங்கே சென்றாா் என்பது குறித்து தெளிவான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் கோத்தபய ராஜபட்ச. ராஜிநாமா குறித்து பிரதமர் ரணிலுக்கு அதிகாரப்பூர்வமாக கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதிபா் கோத்தபய ராஜபட்ச ராஜிநாமாவை அடுத்து அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்படலாம் என்றும், இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டால் அதன் அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory