» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை; திருப்பி அளிக்க வேண்டும்- இலங்கை பிரதமர் உரை!
புதன் 22, ஜூன் 2022 3:35:02 PM (IST)
இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை என்று நாடாளுமன்றத்தில் இலங்கை பிரதமர் தெரிவித்தார்.

இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் இலங்கை இப்போது மிகவும் கொடிய நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலவாணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது கொலை வெறி தாக்குதல்
சனி 13, ஆகஸ்ட் 2022 11:36:52 AM (IST)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)

தமிழன்Jun 22, 2022 - 04:41:28 PM | Posted IP 162.1*****