» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டோங்கோ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை
சனி 15, ஜனவரி 2022 8:05:52 PM (IST)
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
டோங்கோ தீவுகளில்...
தென் பசிபிக்கில் உள்ள டோங்கோ தீவுகளில் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு காரணமாக, அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன. 2.5 அடிக்கு மேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் சமோவா தீவிலும் 2 அடிக்கு மேல் ஆழிப்பேரலை தாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டோங்கா தீவுகள் முழுவதுக்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.