» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ம்தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின்போது சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கடந்த அக்டோபர் 27-ம்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையானது அரசியலலைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 (சமத்துவ உரிமை, பேச்சு சுதந்திரம் மற்றும் வாழ்க்கை உரிமை), மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960 ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க.வின் மனுவை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதன்படி தி.மு.க.வின் மனு மீது வரும் 11-ம்தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனில் அம்பானி குழுமம் ரூ.27,000 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சனி 9, மே 2026 5:10:44 PM (IST)

விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க கோரி மனுதாக்கல் : ஆளுநருக்கு உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்?
சனி 9, மே 2026 3:53:28 PM (IST)

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்பு : பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 9, மே 2026 11:38:29 AM (IST)

ஐ.டி., ஊழியர்கள் கட்டாய மதமாற்றம்: தலைமறைவு குற்றவாளி நிடா கான் கைது
சனி 9, மே 2026 11:35:05 AM (IST)

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்
சனி 9, மே 2026 11:09:09 AM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏஐ தொழில்நுட்பம் - 40 ஆண்டுகால நடைமுறை மாறுகிறது!
சனி 9, மே 2026 10:53:34 AM (IST)










