» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)
நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும் என்பதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன் என்று சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தொண்டர்களிடம் பேசியதாவது: நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளேன்.அமைச்சர் பதவியில் இருந்து என்னை நீக்கிய பிறகு சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் என்று நான் இங்கே மனதாரக் கூறுகிறேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)

காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ம்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
வியாழன் 6, நவம்பர் 2025 3:58:42 PM (IST)

எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில்: 8-ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:33:53 AM (IST)

அரியானா வாக்காளர் பட்டியலில் புகைப்படம் : பிரேசில் மாடல் அழகி அதிர்ச்சி!
வியாழன் 6, நவம்பர் 2025 11:25:12 AM (IST)








