» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வெள்ளி 13, ஜூன் 2025 11:00:47 AM (IST)

அகமதாபாத் விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "1950களில் நடந்த ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மிட் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் அதே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன்.

அப்போதுதான் விபத்து குறித்து சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது குழுவினரும் இவ்வளவு காலமாக செய்து வருவது வெறும் பிரச்சாரம் மட்டுமே. இது முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் விமானம் விபத்துகுள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory