» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த புரட்சித் தலைவர் : பவன் கல்யாண் புகழாரம்!
வெள்ளி 17, ஜனவரி 2025 5:36:32 PM (IST)

தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் எம்.ஜி.ஆர் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவை பாமரர்களின் ஊடகமாக்கிய புரட்சி நடிகராவார்.
புரட்சித்தலைவரின் 108வது பிறந்தநாளில் தொலைநோக்கு கொண்ட அவரது தனித்துவமான நிர்வாகத்திறனையும், மக்களின் மேம்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த மாறாப்பற்றையும் எண்ணி வியக்கிறேன். மக்கள் பணியில் அவர் என்றும் எமது பேராசானாக, வழிகாட்டி நிற்கிறார். ஓங்குக புரட்சித் தலைவரின் புகழ். என தெரிவித்துள்ளார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இனியாவது மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்: கனிமொழி எம்பி
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:24:49 PM (IST)

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:08:21 PM (IST)

திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம்: 4 பேர் கைது!!
திங்கள் 10, பிப்ரவரி 2025 11:12:19 AM (IST)

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து
சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகம்!
சனி 8, பிப்ரவரி 2025 12:31:40 PM (IST)

மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு!
சனி 8, பிப்ரவரி 2025 10:24:50 AM (IST)

ஒரு கூத்தாடிJan 18, 2025 - 07:49:23 AM | Posted IP 162.1*****