» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தாஜ்மகாலின் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம்: முய்சு புகழாரம்
செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:44:34 PM (IST)

காதல், கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டான தாஜ்மகாலின் மயக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம் என மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 4 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 6-ந்தேதி இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்வு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து முகமது முய்சு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாலத்தீவின் அதிபராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு முகமது முய்சு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகமது முய்சு இந்தியாவிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், முகமது முய்சு தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமான தாஜ்மகாலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்தார். அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சார்பில், மாநிலம் மந்திரி யோகேந்திர உபாத்யாய் வரவேற்றார். தொடர்ந்து தனது மனைவியுடன் தாஜ்மகாலை பார்வையிட்ட முகமது முய்சு, அங்கு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு தாஜ்மகாலில் இன்று காலை 8 முதல் 10 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தாஜ்மகாலை பார்வையிட்ட பிறகு முகமது முய்சு பார்வையாளர்கள் புத்தகத்தில், "தாஜ்மகாலின் மயக்கும் அழகை வர்ணிப்பது கடினம். வார்த்தைகள் இதற்கு நியாயம் சேர்க்காது. இதன் கட்டிட நுணுக்கம், விரிவான வேலைப்பாடுகளும் காதல் மற்றும் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்று எழுதியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

வளர்ச்சிப் பாதையில் இந்தியா : வந்தே பாரத் ரயில்களை துவக்கி பிரதமர் மோடி பேச்சு!
சனி 8, நவம்பர் 2025 12:29:52 PM (IST)

பணமதிப்பிழப்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அறிவிப்பு வந்ததா? மத்திய அரசு மறுப்பு
சனி 8, நவம்பர் 2025 8:49:34 AM (IST)
தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி என்பதை எடுத்துரைப்போம் : ராகுல் காந்தி
வெள்ளி 7, நவம்பர் 2025 4:49:36 PM (IST)

தெருநாய்களை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெள்ளி 7, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: தி.மு.க.வின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 11:56:11 AM (IST)








