» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா-சீனா சிவில் விமான போக்குவரத்து: ஆசிய பசிபிக் மாநாட்டில் பேச்சுவார்த்தை!
வியாழன் 12, செப்டம்பர் 2024 4:16:49 PM (IST)

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கொரோனா காலகட்டத்தின்போது இந்தியா மற்றும் சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை இருநாடுகளுக்கு இடையே நேரடி விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து துறையில் இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாடுகக்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்தும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டெல்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மந்திரி மாநாட்டின்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு மற்றும் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர், சீனாவின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட ராம்மோகன் நாயுடு "இரு நாடுகளுக்கிடையிலான சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை விரைவாக தொடங்குதல் ஆகியவை தொடர்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு: 5 நாள் சிறைவாசம் முடிந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 7:53:30 PM (IST)

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விருப்பமா? 10 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!
திங்கள் 24, மார்ச் 2025 5:43:37 PM (IST)

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி
திங்கள் 24, மார்ச் 2025 5:17:59 PM (IST)

டெல்லி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை : நீதிபதி விளக்கம்
திங்கள் 24, மார்ச் 2025 8:50:46 AM (IST)

குடும்பக்கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட கூடாது : காங்கிரஸ் கருத்து!
சனி 22, மார்ச் 2025 5:50:46 PM (IST)

எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம்: பிரதமர் மோடி
சனி 22, மார்ச் 2025 5:33:10 PM (IST)
