» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:47:00 AM (IST)
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 316 ஐ தாண்டியது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட மேப்பாடி பகுதியில் உள்ள முண்டக்கை, சூரல்மலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தென்னிந்திய மாநிலத்தின் மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்றாகும், மேலும் கடைசியாக 2020 இல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 65 பேர் இறந்தனர்.
கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.
மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன. ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் உட்பட இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை: பவன் கல்யாண் பேச்சு
சனி 15, மார்ச் 2025 12:03:16 PM (IST)

மத்திய அரசுக்கு இப்போதாவது வெட்கம் வந்து நிதி தருவார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்
வெள்ளி 14, மார்ச் 2025 5:47:31 PM (IST)

அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: பா.ஜ., அரசு புகாருக்கு சிசோடியா பதில்
வெள்ளி 14, மார்ச் 2025 5:41:36 PM (IST)

ரூபாய் சின்னத்தை நீக்கியது பிரிவினைவாத அரசியல்: தமிழக அரசு மீது சீதாராமன் கடும் விமர்சனம்
வெள்ளி 14, மார்ச் 2025 10:43:27 AM (IST)

யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்தினேன் : நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்
வியாழன் 13, மார்ச் 2025 5:23:43 PM (IST)

ஹோலி பண்டிகை பேரணி: 10 மசூதிகளை திரையிட்டு மூட உத்தர பிரதேச அரசு உத்தரவு!
வியாழன் 13, மார்ச் 2025 12:48:47 PM (IST)
